Friday 30 December 2011
நாத்திகம்
உண்மைகளுக்கு அப்பால்
ஏன் இந்த உலகம்
இயங்குகின்றது
கேள்வி கேட்டுத் தொடங்கட்டும்
நாத்திகம்
பந்தில் செலுத்திய காற்று
முழுமை
"உண்மை"
பொருட்களின் தோற்றம்
சிந்தனை தொடர்ந்து வந்தது
இல்லை என்பது
இருந்ததன் எதிர்மறை
நாத்திகம்
இருக்கும் பொய்கள் மீது
எழுந்த கேள்வி
மனிதரில் முற்றிப் பழுத்த
சிந்தனையாளன்
நாத்திகன்
அவனே மனிதன்
உண்மை என்றும் ஊணம்
பேசப்படும் உண்மையான
பொய்கள் முன்
கற்பக விருட்சமாக
கேள்விகளேடு
எழுந்த உண்மை
அம்மணமாக்கப்பட்டது
அசிங்கம் என்று போதிக்கப்பட்டது
அவமணம் என்று எழுதப்பட்டது
அனாதையாக்கப்பட்டது
காலம் தேடத் தொடங்கியது
உண்மை போற்றப்படுகிறது
பயன்படுத்தப் படுகிறது
அறிவியல் சுவைக்கப்படுகிறது
உண்மை பெற்றது
ஆண்ம திருப்தி
இதுவும் நாத்திகம்
ப.பார்தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment