Monday 19 December 2011

வேண்டி நிற்கும் புதுவரவு


வற்றிய கிணத்திலே
வரத்து நீர் நிறைவது போல்
வந்து நிற்கும்
தேதி ஒன்று

வரு முன் காப்பதற்கு
வழிகள் பல தொக்கி நிற்கும்
வந்ததற்குள் வாழ்வதென்னி
வாழ்க்கையது கலங்கி நிற்கும்


எது வருமோ எது விடுமோ
எண்ணி திட்டம் தீட்ட
வீட்டு வாடகையோ
என் கதவை தட்டி நிற்கும்
பசி எடுக்கும் வயிறு
பரிகாரம் வேண்டி நிற்கும்

பெற்ற பிள்ளை படிப்பு முதல்
பிறர் வீட்டு நிகழ்வு வரை
அத்தனையும் இவ் வரவில்
அடக்குவதோ பெரும்பாடு
இத்தனைக்கும் மேலே

என் இனியவளின் மாதச் செலவு
வந்து நிற்கும் இயற்கை யோடு

திட்டமோ பற்றாக்குறை
ஈடு செய்ய என் மனமே
வேண்டி நிற்கும் புது வரவை
ப.பார்தீ

No comments:

Post a Comment