Monday 21 November 2011

வசந்தமும் பிறக்குமே


தென்திசை நோக்கினால்
வடதிசை அழியுமா

எண்திசை நேக்கி -நாம்
முது நிலை அடைந்தவர்

மணலதால் சிலையது
உயிர் பெற நினைக்குமா


எது கலை எது பிழை
ரசனையும் அறியுமா

மழை தனில் குடை என
வரியது வந்திடும்

குழை நிலை உளமது
தெளி நிலை பெற்றிடும்

எது செயல் எது வினை
எம்மவர் தெளிந்திட

வரும் புயல் திசை கெட
வசந்தமும் பிறக்குமே
ப.பார்தீ

No comments:

Post a Comment