Saturday 5 November 2011

எதற்காக இப்பிரிவு?


என் இதயத்தில் கனத்த
இதிகாச நாயகியே

வரலாற்றில் காணாத
வண்ணமிகு ஓவியமே

கவிஞர்கள் வார்த்தைகளில்
கண்டிராத கலைச்சுடரே

கருவாக எனைச்சுமந்து
உருவாக்கி விட்டவளே

மதியோடு நான் நடக்க
வழி கூட்டிவந்தவளே


உனக்கான இன்பத்தை
எனக்காக விட்டவளே

பெற்ற பிள்ளை உலகிலே
உயர்வாக வாழ்வதற்கு

நற்றவத்தின் நாயகியே
நல்லுதவி செய்துவிட்டாய்

உன் கடனை தீர்ப்பதற்கு
உணர்விருந்தும் உன் பிள்ளை
ஊணமாக வாழ்கின்றான்

பரிவோடு உனைப் பார்க்க
பிரிவுமேனோ வந்ததுவே

அருகில் நீயும் வேண்டுமம்மா
அணைத்தள்ளி முத்தமிட

எதற்காக இப்பிரிவு
என்தாயே உன்நினைவே
ப.பார்தீ

No comments:

Post a Comment