Monday 7 November 2011

ஏக்கங்கள்


''வண்ணத்துப்பூச்சியே''  நீ
என் எண்ணத்தின் ஆட்சியே நீ
ஓர் நாள் வாழ்கையடி நீ
என்னை உற்று நேக்க வைத்துவிட்டாயடி

இலை ஒன்றில் இட்ட முட்டை நீ
மயிர் கொண்டு பிறப்பெடுத்தாய் நீ
மாற்றார்கள் தெட்டு விட்டல் நீ
மயிர் கொண்டு தாக்கிடுவாய் நீ
கூட்டுக்குள் சென்றவளும் நீ
உருமாறி வந்தவளும் நீ
பட்டுவண்ணம் கொண்டவளும் நீ
பட்டாம்பூச்சீ ஆகிவிட்டாய் நீ

ஓர்நாள் வாழ்கையடி நீ
உலகிற்கழகு சேர்த்தவளும் நீ
பூக்கள் மேல் இருந்தவளும் நீ
பூவினத்தை பெருக்கியவள் நீ

பட்டு வண்ண இறக்கை கொண்டாய் நீ
பார்முழுதும் சுற்றிவந்தாய் நீ
என் நினைவில் பட்டதனால் நீ
என் உணர்வு ஆகியவள்  நீ

வாழ்கையின் தத்துவமே நீ
வாழ் நாளை வரைந்து விட்டாய் நீ
ஏக்கங்கள்  பூமியிலே கோடி
எம் மக்கள் உணரவில்லையடி

மாற்றங்கள் எதுவந்த போதும்
நாம் மனிதனாக வாழவில்லை
போட்டிகள்  பொறாமைகள் இங்கே
உன் வாழ்கையை போற்றனும் வாழ்வாய்

மரணமே ஐனனத்தின் உண்மை அதை
உன் வாழ்க்கையால் வெல்லனும் சொல்வாய்

ப.பார்தீ

No comments:

Post a Comment