விசிரியின் காற்றை
அனுபவிக்க முடியாமல் முகங்கள்
செங்குருதியால் தீட்டப்பட்ட
எல்லைக் கோட்டுக்குள்
வாழ்ந்த மாவீரர்களின்
எண்ணங்கள்
வாழும் அரசியலால்
விலை பேசப்படுகின்றது
முற்றும் என்று
முடிக்கப்பட்ட களங்கள்
திறக்கப்படுகின்றன
முதலாளித்துவம் எனும் சாக்கடையால்
அன்று விறைத்த மனங்கள்
கரையும் கண்ணீர்
கடலையும் வியப்பில் அழ்த்தியது
கட்டளை எனும் வேதம்
காலத்தில் மறைந்து கிடந்த
உண்மைகளுக்கு
உயிர் கொடுக்கின்றன
எத்தைனை இழப்புக்கள் வந்தாளும்
இனணயச் சொல்கிறது
இது நமக்கானதே
ப.பார்தீ
No comments:
Post a Comment