நயவஞ்சகமாக சூரையாடப்பட்ட
என் காதலி
கைவிடப்பட்டிருக்கிறாள்
தேசங்கள் என்ற பின்னனியில்
அவள் சேலைகள் கவரப்பட்டு
அம்மணமாகத் தவிக்கின்றாள்
நாளை நாளை என்ற
இழுத்தடிப்பில்
நாசமாக்கப்பட்ட அவள்
தன் பிள்ளைகள் புதைந்த
நிலத்தில் வளரும் செடிகளுக்கு
வீரம் சொல்லிக் கொடுக்கின்றாள்
என்றோ ஒருநாள்
பிள்ளைகள் வருவார் என்று
ஏக்கத்தில் வானத்தை பார்க்கின்றாள்
வாலிபம் சாகும் முன்
வருகைகள் உறுதியாகும்
வாழ்க்கையும் கையில் சேரும்
நித்தம் அவள் நினைவால்
செத்துப் பிழைக்கும் உயிரை
ஒத்தவரி சொல்லாதே
உயிரே வருவேன்
ப.பார்தீ
No comments:
Post a Comment