எம் கனவுகள்
பாதியில் கலைக்கப்பட்டு விட்டது
வலிகளின் ஏக்கங்களுடன்
வாழ்கை நீழ்கின்றது
ஏக்கங்ளுடன் விழித்த பார்வை
இமைகளின் இயக்கத்தை மறந்தது
பனிக் கால மரங்களின் வறட்சி
பாதுகாப்பையே பறசாற்றுகின்றது
விதைக்கப்பட்ட விதைகள்
விண்னை நோக்கி முலை வீசுகின்றது
எதிர் பார்ப்புக்கள் யாவும்
இயக்கத்தை மறுத்துக் கிடக்கின்றது
நாளைய பயனாளர் இன்று
பிறக்காமல் கூட இருக்கலாம்
எனக்கு என்ன என்ற சுயநலம்
எமக்கு எங்கே என்ற கேள்வியால்
நசுக்கப்படட்டும்
ப.பார்தீ
No comments:
Post a Comment