Thursday 9 February 2012

நசுக்கப்படட்டும்


எம் கனவுகள்
பாதியில் கலைக்கப்பட்டு விட்டது

வலிகளின் ஏக்கங்களுடன்
வாழ்கை நீழ்கின்றது


ஏக்கங்ளுடன் விழித்த பார்வை
இமைகளின் இயக்கத்தை மறந்தது

பனிக் கால மரங்களின் வறட்சி
பாதுகாப்பையே  பறசாற்றுகின்றது

விதைக்கப்பட்ட விதைகள்
விண்னை நோக்கி முலை வீசுகின்றது

எதிர் பார்ப்புக்கள்  யாவும்
இயக்கத்தை மறுத்துக் கிடக்கின்றது

நாளைய பயனாளர் இன்று
பிறக்காமல் கூட இருக்கலாம்

எனக்கு என்ன என்ற சுயநலம்
எமக்கு எங்கே என்ற கேள்வியால்
நசுக்கப்படட்டும்
ப.பார்தீ

No comments:

Post a Comment