என் கல்லறையின்
கதவு திறக்கப்பட்டு விட்டன
என்னை வரவேற்பதற்காக
மலர்த் தோட்டங்கள் வாடி நிற்கின்றன
உரிமையில்லாத உலகில்
உரிமைக்காக
உயிர்கள்
தன்னை அழித்துக்கொள்கின்றன
அனுபவங்கள் திருத்தத்தை தந்தன
திருத்தங்கள் மீண்டும்
அனுபவங்களை தோற்றுவித்தன,
அழிவைத்தவிர
இனச்சேர்கையின் கவர்ச்சி
புதியதை தோற்று விக்கின்றன
சுழர்ச்சிமுறையில்,
சுகங்களை வெறுக்காத வரை
இப்பிறப்பையே வெறுக்கவைக்கும்
மானிடத்தில்
ஆசையின் வீச்சு
மறுபிறப்பின் கற்பனைகளுடன்
பிறப்பு கல்லறையின் திறவுகோல்
உண்மை புலப்படாத வரை
மூடப்படாது கல்லறைகள்
ப.பார்தீ
No comments:
Post a Comment