Friday 17 February 2012

இனியும் வேண்டாம்


நம்பிக்கை எனும் அச்சாணியில்
உண்மைச் சக்கரம்
சுழல விடப்பட்ட நாள்
விவாதங்களுடன் தொடக்கம்

இதயத்துடிப்பு
மழையுடன் கூடிய இடியாக
மனம் எனும் நிழலின் துண்டலால்
மார்பைப் பிழந்தது


காய்ந்த உதடுகள்
காட்டற்று வெள்ளத்தை
கடும் வரட்சியில்
கலங்கவைத்தது

ஏழ்மை என்பது
இல்லாதவனிடம் மட்டுமல்ல
எதிர்காலத்திற்கான விடை
கேள்விக்குறி ஆக்கப்படுபவனுக்கும்

நான் என்பது
தண்ணீரில் எழுதிய எழுத்தாக
இருந்தும் இல்லாத நிலை
எனக்குள்


முடியாது என்ற முடிவு
முடியும் என்ற முடிவுக்கு
முற்றுப் புள்ளியிட்டது

இனியும் வேண்டாம்.......
ப.பார்தீ
17/02/2012

No comments:

Post a Comment