நம்பிக்கை எனும் அச்சாணியில்
உண்மைச் சக்கரம்
சுழல விடப்பட்ட நாள்
விவாதங்களுடன் தொடக்கம்
இதயத்துடிப்பு
மழையுடன் கூடிய இடியாக
மனம் எனும் நிழலின் துண்டலால்
மார்பைப் பிழந்தது
காய்ந்த உதடுகள்
காட்டற்று வெள்ளத்தை
கடும் வரட்சியில்
கலங்கவைத்தது
ஏழ்மை என்பது
இல்லாதவனிடம் மட்டுமல்ல
எதிர்காலத்திற்கான விடை
கேள்விக்குறி ஆக்கப்படுபவனுக்கும்
நான் என்பது
தண்ணீரில் எழுதிய எழுத்தாக
இருந்தும் இல்லாத நிலை
எனக்குள்
முடியாது என்ற முடிவு
முடியும் என்ற முடிவுக்கு
முற்றுப் புள்ளியிட்டது
இனியும் வேண்டாம்.......
ப.பார்தீ
17/02/2012
No comments:
Post a Comment