மண்டியிட்டவர்கள்
நிமிர வைப்பதாகச் சொல்கிறார்கள்
பிச்சை எடுத்தவர்கள்
தருமம் தருவதாவதாகச் செல்கிறார்கள்
காட்டிக் கொடுத்தவர்கள்
காப்போம் என்கிறார்கள்
குறுக்கு வழியில் வந்தோர்
நேர் வழியை துாற்றுகிறார்கள்
ஆடுகளம் இல்லாதோர்
அணியில் சேரத் துடிக்கிறார்கள்
கண்களை மூடி விட்டு
சூரியனைத் தேடுகிறார்கள்
அவர்கள் போராட மனமில்லாதவர்கள்
விடுதலை பற்றி பேசுகிறார்கள்
ப.பார்தீ
No comments:
Post a Comment