Sunday 29 January 2012

சுவாசம்


உடலங்கள்  விதைக்கப்பட்ட
பூமியில் திருவிழா

நாட்டப்படும் கம்பங்கள்
விதைக்கப்பட்ட உடலங்களில் பட்டு
கதறுகின்றது


ஏற்றப்பட்ட கொடி
வீழும் என்று தெரியாமல்
ஏகாதிபத்தியம் பேசுகின்றது

கூட்டுக்குள் இருந்த
காலத்தை விட கொள்கை
கூடுதல் பற்றுடன்
தேசத்தின்  பிறப்பு தான்
விடுதலை என்கிறது

காற்றுக்கு வேலியிடப்பார்க்கும்
அவன் கரங்கள்
கரைந்த எம் சுவாசத்தில் பட்டு
கருகிக்  கிடக்கின்றது

நாளை
இன்றை விட எமக்குச் சொந்தம்
எம் சுவாசம் எம்மிடம் திரும்பும் வரை
ப.பார்தீ

No comments:

Post a Comment