உடலங்கள் விதைக்கப்பட்ட
பூமியில் திருவிழா
நாட்டப்படும் கம்பங்கள்
விதைக்கப்பட்ட உடலங்களில் பட்டு
கதறுகின்றது
ஏற்றப்பட்ட கொடி
வீழும் என்று தெரியாமல்
ஏகாதிபத்தியம் பேசுகின்றது
கூட்டுக்குள் இருந்த
காலத்தை விட கொள்கை
கூடுதல் பற்றுடன்
தேசத்தின் பிறப்பு தான்
விடுதலை என்கிறது
காற்றுக்கு வேலியிடப்பார்க்கும்
அவன் கரங்கள்
கரைந்த எம் சுவாசத்தில் பட்டு
கருகிக் கிடக்கின்றது
நாளை
இன்றை விட எமக்குச் சொந்தம்
எம் சுவாசம் எம்மிடம் திரும்பும் வரை
ப.பார்தீ
No comments:
Post a Comment