கருமேகம் கரைதலுக்காய்
சுடுபூமி காத்திருக்கு
சிலவேளை மறு நொடியே
தந்திடலாம் மனங்குழிர
எது உண்மை?
எதிர்பார்ப்பு உள்ளவரை
இழப்புக்கள் உருவாகும்
பூமி என்ன விதிவிலக்கா
பொசுங்கும் செடிகள் முன்
தனக்குள்ளே உள்ளதனை
சரிவரத் தான் செய்யவில்லை
எதற்கும் மனிதர் நாம்
எதிர்பார்ப்பு என்பதனை
எமக்கு நாமே வைத்துக் கொண்டால்
நாமக்கு நாமே வெற்றியாளன்
ப.பார்தீ
No comments:
Post a Comment