இன்றும் உயிருடன் இருக்கிறாய்
சுட்டு எழுப்பியது சூரியன்
ஓயாது உழைக்கும் வயிறு
எழுப்பியது ஓசை
இன்றைய உழைப்பின்
வருமானம் என்னவோ !!!
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
கடவுளிடம் அல்ல
கண்ணிருந்தும் குருடாகி
கல்லிற்கு காணிக்கையிட்டோர் முன்
இரத்தமும் சதையும் கொண்ட
மனிதராய்
விடியும் பொழுதுக்காய் ஏங்கி
வியப்பான பொருளாக்கப்பட்டோம்
விழியில்லா பார்வையாளர் முன்
விடிவுக்காய் !!
ப.பார்தீ
No comments:
Post a Comment