Saturday 7 January 2012

புதிய உலகிற்கு


துாக்கம் தொலைத்த
இரவுகளைக் கேட்டுப் பார்
துடிக்கும் இதயத்தில்
உன் உயிரின் ஓசையை


உள் இழுத்த சுவாசம்
உறைந்தது நீ இருக்கும்
இதயத்தில் பட்டு
உறை பனியாக

மழை தந்து கலைந்த
மேகங்கள்
பிரியும் உனை பார்க்கும்
கண்களும் கசியும்

ஏக்கங்கள் நொடிகளை
நீள் நாட்களாக்கியது
இனி ஒரு சந்திப்பிற்கு
இருப்பேன் சிலையாக

காற்றில் தெரியும்
காணல் எனக்குள்
கடும் மழையில்
கலைந்து விடும் என்று அறியாமல்
தான் தோட்ட இழநீரை
பருகிய பின்
வெட்டி எறியப்பட்ட கோம்பை
புதிய உலகிற்கு பயன் கொடுக்க

ப.பார்தீ

No comments:

Post a Comment