துாக்கம் தொலைத்த
இரவுகளைக் கேட்டுப் பார்
துடிக்கும் இதயத்தில்
உன் உயிரின் ஓசையை
உள் இழுத்த சுவாசம்
உறைந்தது நீ இருக்கும்
இதயத்தில் பட்டு
உறை பனியாக
மழை தந்து கலைந்த
மேகங்கள்
பிரியும் உனை பார்க்கும்
கண்களும் கசியும்
ஏக்கங்கள் நொடிகளை
நீள் நாட்களாக்கியது
இனி ஒரு சந்திப்பிற்கு
இருப்பேன் சிலையாக
காற்றில் தெரியும்
காணல் எனக்குள்
கடும் மழையில்
கலைந்து விடும் என்று அறியாமல்
தான் தோட்ட இழநீரை
பருகிய பின்
வெட்டி எறியப்பட்ட கோம்பை
புதிய உலகிற்கு பயன் கொடுக்க
ப.பார்தீ
No comments:
Post a Comment