புவியீர்ப்பு விசையின்
சக்திக்குள்ளே
உயரப்பறக்கும் பருந்து
கண்ணில்பட்டதை
தன்னிலும் சிறியதென்றது
துாரம் எம் பார்வைக்குள்
அடக்கப்படும் காட்சிகள் அல்ல
அதையம் தாண்டும்
அருகே போகும்போது
ஈர்க்கப்படும் விடையம்
எம் சிந்தனையில்
கட்டுப்பாட்டை விதிக்கின்றது
சாட்சி
ஒதுக்கப்பட்ட உண்மைகள்
அருகில் இல்லாத
ஒன்றின் மீதான விருப்பம்
இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது
இழக்க நேரிடும் என்ற
உண்மை அறியாதவரை
சிந்தனைப் பந்தில்
அடைக்கப்பட்ட காற்றல்ல
பரந்த விரிந்த பூமிப்பந்தில்
பார்வையின் நோக்கத்தில்
பயனுள்ள படைப்பாளி
ப.பார்தீ
No comments:
Post a Comment