அவர்கள் கல்லறைகளில் இருந்து
அதற்கான கருவறைகள்
திறக்கப்படட்டும்
எதிர்கால தேவை உணர்ந்த
விடுதலை விரும்பிகளின்
வார்தைகளில் இருந்து பிறக்கட்டும்
எண்ணப்பட்ட சடலங்களின்
ஏக்கங்களில் இருந்த
பூத்தெழட்டும்
சீரழிக்கப்படும் சேலை
நுால்களில் இருந்து
நெய்யப்படட்டும்
விழுங்கப்படும் மொழிகளின்
அழகில் இருந்து
ஆர்ப்பரிக்கட்டும்
புதைபொருளாய் சிதையும்
பண்புகளில்இருந்து
பாய்ந்து எழட்டும்
கணக்கில் எண்ணப்படாத
முள் வேலிகளில் உடைப்பிலிருந்து
ஊர்ந்து வரட்டும்
எங்கே அவர்கள் என்ற கேள்வியில்
நாமும் அவர்களில் இருந்தே
என்று தோற்றம் பெறட்டும்
ப.பார்தீ
No comments:
Post a Comment