நாங்கள் வாயை
மூடிக் கொண்டிருந்தால்
இந்தப் பாடலை இசைப்பது யார்
ஆணும் பெண்ணும்
இந்தப் பாடலை இசைப்பதற்காகவே
படைக்கப் பட்டிருக்கிறார்கள்
இங்கு மட்டும் என்ன
அதிசயம்
காலம் சந்தர்ப்பம் தந்து விடும்
இந்த பாடல்
இசைக்காமல் போனால்
இந்த பிரபஞ்சம் ஏது
மனிதன் மட்டும் என்ன?
எல்லாம்
மூன்று காலத்திலும்
பாடுகின்றன
இந்த பாடலை
பாடாமல் போனால்
காதல் ஏது ?
காதலியே
பாடுவது காதலின்
உச்சஸ்தாயி
உணர்வதை விட
பாடுவதே பிரபஞ்ச அழகு
ப.பார்தீ
No comments:
Post a Comment