Monday 20 August 2012

ஒப்பாரிகளின் சங்கமத்தில்



எல்லாப்பிறப்பும் எழும்
யோனித் துவாரதின்
வாசலில் இருந்து

நான்கரைக் கோடியும்
நானே கருவாவேன்
என்பதைப்போல

நீந்தும் உலக வாழ்வில்
நிலைக்காத பிறப்புடன்
போட்டி தொடங்குகிறது

ஆயிரம் யானையிலும்
அதன் பலம் அதுவே உணரும்
என்ற நியதியிலும்


எதிரே இருப்பவன்
என்று வீழ்த்தப்படலாம்
என்ற ஏக்கத்திலும்

உச்சத்து சூரியனை
ஒரு குடை மறைத்திடும்
என்ற மடமையிலும்

பக்கத்தில் உள்ளவன்
பணத்தை தான் புசிக்கிறான்
என்ற அர்ப்பத்திலும்

தடித்த மனச்சாட்சிகள்
தாழ்வார நீருக்கும் உரிமை கோரி
தன் வீடு முகவரியை இடுகிறார்

எல்லோரும் அறிந்த பூகோள இயக்கம்
ஒப்பாரிகளின் சங்கமத்தில்
மேடை ஏற்றப்பட்ட
முடிவுரை
மரணம்
ப.பார்தீ

No comments:

Post a Comment