Sunday 1 April 2012

தேற்றம்


தீட்ட முடியாத வார்தைக்குள்
செருகி நிக்குது அன்பு
போற்ற நினைக்கும் உள்ளத்தில்
புதைந்து கிடக்குது பாசம்

நேற்று நீ வளர்த்தசெடியில்
நிறைந்திருக்குது பூக்கள்
சோற்றில் நீவைத்த கரங்கள்
சோர்ந்து நிக்குது இன்று



காற்றில் நீதந்த வார்த்தை
கரைந்து நிக்குது கண்ணில்
கோட்டில் நடை பழக்கிய கால்கள்
சோர்ந்து கிடக்குது மண்ணில்

துாக்கி வளர்த்த  கரத்தை
பிரித்து நிக்குது துாரம்
ஆற்றல் படுத்துதற்கு
அழைப்பது செய்து நிக்க

ஈற்றில் என் உள்ளம்
ஏமாந்து ஏங்கி நிற்க
தேற்றமுறு சீக்கிரமாய்
சேலைநுணி பற்ற நானும்
ப.பார்தீ

No comments:

Post a Comment