விளைச்சல் காணாத
பயிர்களின் அறுவடை
விஞ்ஞானம் தான்
என்ன செய்யும்
வினவுகின்ற கேள்விகளுக்கு
நட்பு என்ற பதிலுடன்
நாளைய தேடுதல்
தொடங்குகின்றது
உள்ளங்கைக்குள் சுருக்கப்பட்ட
உலகில்
தனிமையின் ஏக்கம்
புதியதை தேடுகின்றது
தேடுதலின் பரிணாமம்
தேடப்படுபவன்
சிந்தனைக்குள் சிக்கி
சிதறுண்டு கிடக்கிறது
அறிவோடு அழிவும்
கொட்டிக்கிடக்கும் காற்று வெளியில்
தொட்டணைக்கும் கரங்களின்
சுவை இரசனைக்கேற்ப
பெரு மழையில் நனைந்து
காயும் காட்டு விலங்குகள்
சிலுகு நீர்பட்டு சீக்காகி
வீழ்வதா
ப.பார்தீ
No comments:
Post a Comment