Saturday 14 April 2012

நாங்கள் ஏனெடா


அண்டம் துளைத்து
அகிலம் நோக்க
கொண்ட பெயரெடா

கொண்ட கொள்கையில்
குழையா நின்று
வென்ற பெயரெடா


மன்றம் போட்டு
மக்களை காத்த
மாணப் பெயரெடா

வந்த எதிரியை
வகையாய் நோக்கி
வென்ற பெயரெடா

உங்கள் இருக்கையை
உரமாய் காக்க
மின்னும் பெயரெடா

இன்று அனைவரும்
இசைவாய் பேசி
தின்னும் பெயரெடா

எங்கள் பெயரினை
ஏலம் விட்டிட
நீங்கள் யாரெடா

உங்கள் கொள்கையை
உறத்தி  சொல்லிட
நாங்கள் ஏனெடா
ப.பார்தீ

No comments:

Post a Comment