நாங்கள் ஏனெடா
அண்டம் துளைத்து
அகிலம் நோக்க
கொண்ட பெயரெடா
கொண்ட கொள்கையில்
குழையா நின்று
வென்ற பெயரெடா
மன்றம் போட்டு
மக்களை காத்த
மாணப் பெயரெடா
வந்த எதிரியை
வகையாய் நோக்கி
வென்ற பெயரெடா
உங்கள் இருக்கையை
உரமாய் காக்க
மின்னும் பெயரெடா
இன்று அனைவரும்
இசைவாய் பேசி
தின்னும் பெயரெடா
எங்கள் பெயரினை
ஏலம் விட்டிட
நீங்கள் யாரெடா
உங்கள் கொள்கையை
உறத்தி சொல்லிட
நாங்கள் ஏனெடா
ப.பார்தீ
No comments:
Post a Comment