Wednesday 4 April 2012

சாம்பல் பூக்கள்


உங்கள் உடலங்கள்
உளைப்புக்காய் உப்பேறி
உச்சத்தில் நீறாகி
தேசத்தில் படர்ந்துவிட

கண்ணீர் துளிகளிலும்
கை வணங்கும் மனங்களிலும்
எண்ணி முடியாத
ஏக்கத்தை விதைத்தீரே


மண்ணில் பிறந்தவர்க்கு
மானமுள்ள விடுதலைதான்
விண்ணில் போனாலும்
வீழாத வாழ்வென்றீர்

எண்ணிப் பார்த்தவுடன்
எதிரி துடை நடுங்க
கண்ணின் இமை போல
காத்தீரே எமை எல்லாம்

எல்லா சோகங்களும்
ஏக்கங்களால் பின் தொடர
கல்லால் நெஞ்சங்களும்
கண்ணுருகி பேர்சொல்ல

வல்ல சக்திகள் நீர்
வாழ்ந்த கொள்கைகள் நீர்
பொல்லாப் பிறப்பினிலே
புழுதிகள் நாம் உம்முன்னே

எங்கு சென்றிடினும்
உங்கள் சாம்பல் மேல்
உம் கனவை நனவாக்க
பூத்த செடிகள் நாம்

ப.பார்தீ

2 comments: