ஒப்பந்தம்
உணர்வின் மிதப்பு வார்த்தைகளைவிழுங்கிகண்கள்கண்டம் விட்டுக் கண்டம் ஒப்பந்தம் செய்கின்றது
போருக்கான அழைப்பு
ஒப்பந்தத்தின் மாற்று விதியாய்
புன்னகையில் சேர்கின்றது
இவ்வாறு ஒப்பந்தங்கள் இருந்து இருந்தால்
நெப்போலியன் காலத்தின் முன்
மனிதனைக் கொல்லும் கலை
மனிதருள் வளர்ந்திருக்காது
நிறங்கள் வெறும் நிறங்களாகவே இருந்திருக்கும்
படைப்பின் இரகசியம் உறுப்புகளின்
கழிவில் இருந்தே என்ற உண்மை புரிந்திருக்கும்
இந்த
ஒப்பந்தங்கள் நிறைவதற்குள்
அமைதிக்கான உலக ஒழுங்கு
கொலைகளால் மாலை சூடிக்கொண்டது
No comments:
Post a Comment