Saturday 1 October 2016

ஒப்பந்தம்


உணர்வின் மிதப்பு வார்த்தைகளை
விழுங்கி
கண்கள்
கண்டம் விட்டுக் கண்டம் 
ஒப்பந்தம் செய்கின்றது

போருக்கான அழைப்பு
ஒப்பந்தத்தின் மாற்று விதியாய்
புன்னகையில் சேர்கின்றது

இவ்வாறு ஒப்பந்தங்கள் இருந்து இருந்தால்
நெப்போலியன் காலத்தின் முன்
மனிதனைக் கொல்லும் கலை
மனிதருள் வளர்ந்திருக்காது
நிறங்கள் வெறும் நிறங்களாகவே இருந்திருக்கும்
படைப்பின் இரகசியம் உறுப்புகளின்
கழிவில் இருந்தே என்ற உண்மை புரிந்திருக்கும்

இந்த
ஒப்பந்தங்கள் நிறைவதற்குள்
அமைதிக்கான உலக ஒழுங்கு
கொலைகளால் மாலை சூடிக்கொண்டது

No comments:

Post a Comment