கடலுக்குமான தூரத்தில்
மகிழ்ச்சிக்குள் மனம் சிந்தை
கொல்ல
மொழி அற்றுத்தவிக்கிறது நா
நதியின் லயம் ஆகாயத்துளிகளால் சிதம்ப
ஆத்மா கரையும் ஓசை
அனிச்சையான அமைதியின் ஊடே
படபடக்கும் நெஞ்சுக்குள்
நினைந்துஉருகும்
மூங்கில் வனத்தில் காற்று
துளையோடு உறவாட
பனிபடர்ந்த பச்சிலைப்பரப்பில்
உருகி வழியும் நீர்த்துளியில்
நா நனைக்கும்
இசையாலே தனை மறந்த மிருகமது
எண் திசையின் இயல்போல
இசையோடு நீந்திவரும் நதி மூழ்கும்
இயல்பு நிலை
நிகழ்ந்தபின்னே பெரு அமைதி
மூச்சாகி
காற்றோடு கலந்துநிற்கும்
No comments:
Post a Comment