Saturday 1 October 2016

வானுமோர் வள்ளள்


முகில்க்கூட்டம் விழுங்குகிறது
நட்சத்திரங்களின் வாழ்வை

காரணம் கேட்கும் மண்மீது
முறைக்கின்றது காற்றின் பயனம்

இடையே எட்டிப்பார்க்கும் நிலா
முகிலுக்குள்
காதல் நரம்புகளை உசுப்பிவிடும்

கல கலத்த சருகுகள் முறைக்கும் காற்றோடு பயனமாக

மெல்லியதாய் ஒரு சொட்டுத்தண்ணி
மேனி தடவும்

அனல்போல் கொதிக்கும் அந்தரங்கள்
ஆவியாக்கும்

இருள் தின்ற வானம்
காதல் கடந்து காமம் எய்த
முழுதாய் நனைகின்றது மண்

No comments:

Post a Comment