வானுமோர் வள்ளள்
முகில்க்கூட்டம் விழுங்குகிறது
நட்சத்திரங்களின் வாழ்வை
காரணம் கேட்கும் மண்மீது
முறைக்கின்றது காற்றின் பயனம்
இடையே எட்டிப்பார்க்கும் நிலா
முகிலுக்குள்
காதல் நரம்புகளை உசுப்பிவிடும்
கல கலத்த சருகுகள் முறைக்கும் காற்றோடு பயனமாக
மெல்லியதாய் ஒரு சொட்டுத்தண்ணி
மேனி தடவும்
அனல்போல் கொதிக்கும் அந்தரங்கள்
ஆவியாக்கும்
இருள் தின்ற வானம்
காதல் கடந்து காமம் எய்த
முழுதாய் நனைகின்றது மண்
No comments:
Post a Comment