நெருப்பாற்றில்
அமைதி இழந்த காட்டின்சலசலப்பில்பசுக்கள் திசை அறியாது பட்டிகளை
மேய்கின்றது
ஒரு கன்னையில் ஒட்டமுடியாது
நாய்கள்
பசுக்களைக் காப்பதாய்
தனித்தனியே ஊழையிடுகின்றது
நாய்களின் திசைஅறிந்து
நரிகள்
பசுக்களின் பக்கம் பயணமாகின்றது
பசுவைத் தின்று ஊண் வடியும் தன் வாயை
காகங்கள்
துடைத்தபடியே நாய்களைப்
பகிடிபண்ணிப் பறக்கிறது
No comments:
Post a Comment