Saturday 1 October 2016

நெருப்பாற்றில்


அமைதி இழந்த காட்டின்
சலசலப்பில்
பசுக்கள் திசை அறியாது பட்டிகளை
மேய்கின்றது

ஒரு கன்னையில் ஒட்டமுடியாது
நாய்கள்
பசுக்களைக் காப்பதாய்
தனித்தனியே ஊழையிடுகின்றது

நாய்களின் திசைஅறிந்து
நரிகள்
பசுக்களின் பக்கம் பயணமாகின்றது

பசுவைத் தின்று ஊண் வடியும் தன் வாயை
காகங்கள்
துடைத்தபடியே நாய்களைப்
பகிடிபண்ணிப் பறக்கிறது

No comments:

Post a Comment