நினைவோர் வரம்
அம்புலி அற்ற தாரகைஒளியில்இருளின் நிசப்த்தம் நீண்டு அன்பின் உணர்வில்
வார்த்தைகள்
காலத்தின்ஊடே கரைகிறது
பனிக்காற்றில் மிதந்துவரும் மூச்சின்சந்தம் பரவிக்கிடக்கும்
இருளின் திரையில்
வண்ணங்கள் பூச
முகம் படிந்த
மணித்துளியின் மேலே ஊர்கிறது
சூரிய ஒளி
இலைகளின் முத்த இசை
மொட்டுக்களை பூப்புக்காய் அழைக்க
கற்றில் மிதக்கிறது போதைதரும்
நினைவெனும் பாணம்...
No comments:
Post a Comment