Saturday 1 October 2016

நினைவோர் வரம்


அம்புலி அற்ற தாரகைஒளியில்
இருளின் நிசப்த்தம் நீண்டு 
அன்பின் உணர்வில் 
வார்த்தைகள்
காலத்தின்ஊடே கரைகிறது

பனிக்காற்றில் மிதந்துவரும் மூச்சின்சந்தம் பரவிக்கிடக்கும்
இருளின் திரையில்
வண்ணங்கள் பூச
முகம் படிந்த
மணித்துளியின் மேலே ஊர்கிறது
சூரிய ஒளி

இலைகளின் முத்த இசை
மொட்டுக்களை பூப்புக்காய் அழைக்க
கற்றில் மிதக்கிறது போதைதரும்
நினைவெனும் பாணம்...

No comments:

Post a Comment