Sunday 9 December 2012

நினைவே நீ



நிசப்த்தமான நிலவொளியில்
இரவின் சாட்சியாக வானை அலங்கரித்த
நட்சத்திர கூட்டத்தின் நடுவே
என் பார்வையின் எறிதலில்
எழுந்த உண்மை ஒன்றில்
அண்ட வெளிக்கு சொந்தமான பொருள் ஒன்றை
பூமி உரிமையாக்கிவைத்ததை உணர்ந்தேன்


நாளை நிலவு தேய்ந்ததாய்
காட்சி அளிக்கலாம்
ஏன் நட்சதிரக்கூட்டத்தை 
மழைமேகம் மறைக்கலாம்
இடி மின்னல் மழை பனி வெய்யில்
பருவங்களில் மாறலாம்
இது இயற்கையின் விதியானபோதும்
எழில் கொஞ்சும் உன் நினைவுமட்டும்
என் உள்ளத்தில் விடிதல்
ஒவ்வொன்றிலும் புதியதே


வறுமை பிறந்த இடத்தை யார் அறிவார்
புதுமை விளைந்த போது வறுமையும் பிறந்ததோ
அதனால்தான்  உன் நினைவும் 
என்னை சுற்றும் வறுமையானதோ

நினைவுகள் பழைமையாகி
உரிமையாய் உள்ளம் தீண்ட
உரிமை கொள் உண்மைதானே
நினைவினால் கொள்ளும் காதல்
ப.பார்தீ

No comments:

Post a Comment