Sunday 2 December 2012

நாம் ஒருவர்



மீண்டும் படபடத்த
தாவர இதயங்களின் சங்கமத்தில்
மறைக்கப்பட்ட மணல் கீறல்களின்
மௌனங்ளில் புதைந்துள்ள
உண்மைகளின் தேடலுக்கு

சந்தேகத்தின் எழுச்சியால்
இறக்கை விரிக்கும்
கோபத்தின் பெருக்கில்
மாறடித்து துாவும் பூக்கள் யாவும்
மலர்வளையம் ஆக்கப்படும் போது


இழந்த இழப்பின் நினைவுகளில் 
உணர்ந்த கன்னக் கசிவில்
கருவறையின் உன்னதத்தையும்
காமத்தின் சூட்சுமத்தையும்
யார் உணர்வார்

உணர்வுகள் எல்லாம்
விசிரப்படும் சில்லரைக்கும்
விழுந்து கரை சேராத
எதிர்காலம் எனும் முடிவிலிக்கும்
தீனியாக்கப்படும் போது

அறுவடையின் பின்னான
விளைச்சலுக்கு நான்
சமர்பிக்க விரும்பும்
மரணம் எனும் புன்னகையில்
நாம் ஒருவரே 
ப.பார்தீ

No comments:

Post a Comment