மீண்டும் படபடத்த
தாவர இதயங்களின் சங்கமத்தில்
மறைக்கப்பட்ட மணல் கீறல்களின்
மௌனங்ளில் புதைந்துள்ள
உண்மைகளின் தேடலுக்கு
சந்தேகத்தின் எழுச்சியால்
இறக்கை விரிக்கும்
கோபத்தின் பெருக்கில்
மாறடித்து துாவும் பூக்கள் யாவும்
மலர்வளையம் ஆக்கப்படும் போது
இழந்த இழப்பின் நினைவுகளில்
உணர்ந்த கன்னக் கசிவில்
கருவறையின் உன்னதத்தையும்
காமத்தின் சூட்சுமத்தையும்
யார் உணர்வார்
உணர்வுகள் எல்லாம்
விசிரப்படும் சில்லரைக்கும்
விழுந்து கரை சேராத
எதிர்காலம் எனும் முடிவிலிக்கும்
தீனியாக்கப்படும் போது
அறுவடையின் பின்னான
விளைச்சலுக்கு நான்
சமர்பிக்க விரும்பும்
மரணம் எனும் புன்னகையில்
நாம் ஒருவரே
ப.பார்தீ
No comments:
Post a Comment