Monday 2 February 2015

பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்.



பணமே !
நானும் உன்னைப்போலவே
ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
நான் அகலவிரித்த இரு கைகளுக்குள்
எண்ணிலடங்காத ஆசைகள்


ஆசைகளுக்கு அர்த்தம் தேடும்முன்
இருக்கையின்மீது முட்களையும்
பாதைகள் மீது கற்களையும்
பரிசாகத்தந்தது உலகு.

அது திறத்தும்
கட்டாய பயணத்தின்
பிரயாணங்களில் குருதி நாற்றம்

வெறுப்பும் கோவமும் நிறைந்த
பாதை
வெற்றி தீர்மானிக்கப்பட்டபின்னும்
போட்டி தொடரும் கதையில்

மனிதன் விழுங்கிய இரக்கம் இன்னும்
இரைமீட்காமல் கிடக்கிறது வங்கிகளில் கணக்காய்
அச்சூட்டில் இரக்கமற்றுக் கனவு காண்கிறது
 பில்கேட்ஸ் வீட்டு மெத்தைகள்
ப.பார்தீ

No comments:

Post a Comment