வரிகளில் அடக்கமுடியாத
வசந்தகாலப் பிறப்பொன்றின்
இரம்மியமான நினைவுகளில்
தூசிதட்டப்பட்ட நிலாமுகத்தின்
ஒப்பனையை தொலைத்து விட்டு
தேடும் பிரிவு
வர்ணக்கலவையினால் வீசப்பட்ட
எண்ண ஓட்டம்
இயற்கையில் கண்டிராத
வர்ணத்தை தீட்டி நிற்கும்
கலக்கமற்ற குழப்பம் ஒன்றின்
தேடலுக்கு
மருத்துவத்தால் விடை காணத்துடிக்கும் போது
அதிசயம் ஒன்றை ஆராய்ந்து பதிலளிக்கும்
விஞ்ஞானம்
வார்த்தைகளில் இருந்து
சில வசனங்களை திருடுவதற்கு
நினைவுகளை மீட்கும் போது
மீண்டும் ரீங்காரமிடும்
காற்றில் சேமித்து வைத்த
அந்த இனிய ஒலி
நரம்புகளில் இசை பிறக்கும் போதும்
ஞாபகம் வைத்திராத கருவிகள்
மீண்டும்
இசைப்பவன் வருகைக்காய்
காத்து நிற்கும்
ப.பார்தீ
No comments:
Post a Comment